வங்கி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் நிறுவனர் வேணுகோபாலுக்கு ஜாமீன்..!

ஐசிஐசிஐ வங்கிக் கடன் முறைகேடு விவகாரத்தில் வீடியோகான் குழுமத்தின் நிறுவனர் வேணுகோபாலுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியுள்ளது.

சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த போது, வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் தருவதில் சலுகைக் கட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பிரதி பலனாக சந்தா கோச்சாரின் கணவரின் நிறுவனத்திற்கு பெரும் தொகையை வீடியோகான் தந்ததாகக் கூறி, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக, வீடியோகான் குழுமத்தின் நிறுவனர் வேணுகோபால், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.