சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா, முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக […]