ஆபாச வீடியோ விவகாரம் ராக்கி சாவந்த் மீது நடவடிக்கை எடுக்க தடை

மும்பை: ஆபாச வீடியோ விவகாரத்தில் நடிகை ராக்கி சாவந்த் மீது நடவடிக்கை எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் இன்று வரை தடை விதித்துள்ளது. பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்துக்கும்,சக நடிகை ஒருவருக்கும் இடையே மோதல் இருந்துவருகிறது. ஒருவர்மீது ஒருவர் போலீஸில் புகார் செய்திருக்கின்றனர். இருவரும் ஒருவர்மீது மற்றொருவர் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. தனது ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை ராக்கி சாவந்த் சோசியல் மீடியாவில் பகிர்ந்ததாக சக நடிகை மும்பை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் போலீஸார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில்,ராக்கி சாவந்த் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.கார்னிக், இந்த வழக்கை நாளைக்கு (இன்று) ஒத்திவைப்பதாகவும், அதுவரை அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.