சென்னை: “எதிரணி குழப்பத்தில் இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை இன்னும் தேர்வு செய்யவில்லை” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (ஜன.23) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கிய திமுகவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.