பெரம்பலூர் மாவட்டத்தில் பிரபல ரவுடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி முருகேசன்(40). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நன்னடத்தைப் பிணையில் வெளியே இருந்து வந்த முருகேசன், நேற்று மாலை இந்திரா காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார், முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முருகேசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.