தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை: திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் செ.பா.பாவாணன், சசி கலைவேந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் … Read more

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: அரசு எடுக்கும் முடிவு!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை ஊதியத்தில் முதல் தரப்புக்கு ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள … Read more

புதிய இந்தியாவின் தேசத்தந்தை மோடி; பாஜக கருத்துக்கு நிதிஷ்குமார் பதிலடி.!

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 21ம் தேதி நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, பாஜக மூத்தத் தலைவரும், மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் மனைவி அம்ருதா பட்னவிஸ் பேசும்போது, ‘‘நாட்டில் இரண்டு தேசப்பிதாக்கள் உள்ளனர். ஒருவர் இந்தியாவின் முந்தைய காலத்தின் தந்தை. மற்றொருவர், நவீன இந்தியாவின் தேசத் தந்தை. முந்தைய காலத்தின் தேசத் தந்தை மகாத்மா காந்தி. நவீன இந்தியாவின் தேசத் தந்தை பிரதமர் நரேந்திர மோடி’’ என்று அவர் … Read more

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் என்ன? ஏன் கூடவில்லை? தொடரும் கேள்விகள்

நியூடெல்லி: 2023 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. புத்தாண்டை மக்கள் புதிய ஆற்றலுடன் கொண்டாடுகிறார்கள். இதனுடன், புத்தாண்டில், மக்கள் புதிய வேலைகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதே நேரத்தில், புத்தாண்டின் போது, ​​மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளாக செய்யும் முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தற்போது புத்தாண்டை முன்னிட்டு சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பும் பொய்க்க செய்த அரசின் திட்டம் இது. முதலீட்டு திட்டம் உண்மையில், மக்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பதிலும் முதலீடு … Read more

சென்னை சங்கமம் – என்னென்ன நிகழ்ச்சிகள்… முழு விவரம்

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி வருகிற 13ஆம் தேதி தொடங்குகிறது. தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. ஒருங்கிணைக்கிறார். தொடர்ந்து 17ஆம் தேதிவரை 4 நாட்கள் சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன் விவரம் பின்வருமாறு, “தீவுத்திடல், பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், கொளத்தூர், முரசொலி மாறன் மேம்பால பூங்கா, பெரம்பூர், ராபின்சன் பூங்கா, ராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, பெருநகர … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்தில் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த கத்திக்குத்து: பொலிஸார் விசாரணை

அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தன்று டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் மீண்டும் மீண்டும் கத்தி குத்து சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளார். புத்தாண்டில் கத்தி குத்து அமெரிக்காவில் சனிக்கிழமையன்று டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நகரம் தயாராகிக் கொண்டிருந்த போது கத்தி குத்து சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதில்  41 வயதான ஆண் ஒருவர் உடல் மற்றும் முதுகில் பல கத்திக் காயங்களால் பாதிக்கப்பட்டார் மற்றும் தீவிரமான நிலையில் பெல்லூவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  நியூயார்க் … Read more

ஓட்டிப்பார்க்க சென்றபோது விபரீதம்; மினி வேன் மீது புது பைக் மோதி மாணவன் உள்பட 3 பேர் பலி: திருப்போரூர் அருகே பரிதாபம்

திருப்போரூர்: புதிய பைக்கை ஓட்டி பார்க்க சென்றபோது மினி வேன் மீது மோதியதில் பள்ளி மாணவர் உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சென்னை பெருங்குடி, கல்குட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (27). இவர் வீடுகளுக்கு பால் சீலிங் எனும் அழகுபடுத்தும் வேலை செய்துவந்தார். திருப்போரூர் அருகே உள்ள கரும்பாக்கத்தை அடுத்த விரால்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுபா என்பவரை திருமணம் செய்துகொண்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு அருகே ஒரு … Read more

புத்தாண்டை ஒட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் வருகை அதிகம்

சென்னை: புத்தாண்டை ஒட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிகளவு பார்வையாளர்கள் வருகை புரிந்ததால் கூடுதல் பார்வையாளர்கள் வர வாய்ப்பு இருந்தும் முறையான ஏற்பாடுகளை செய்யாததால் சிறுவர்களுடன் காத்திருக்க முடியாமல் நெரிசல் மிகுதியால் பலர் திரும்பிச் செல்கின்றனர். அதிகளவு பார்வையாளர்கள் குவிந்ததால் ஒழுங்குபடுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். புத்தாண்டு என்பதால் வனத்துறை அதிகாரிகள், உயரதிகாரிகளை சந்திக்க சென்றதால், ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார் விபத்தில் சிக்கியது எப்படி?: ரிஷப் பன்ட் விளக்கம்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட். 25 வயதான இவர் இந்த ஆண்டு பிசிசிஐயின் டெஸ்ட் சிறந்த பேட்ஸ்மேன் விருதையும் வென்று இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தாயாரை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து காரில் சொந்த ஊரான உத்தரகாண்ட் செல்லும்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தற்பொழுது அவர் டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பேசி உள்ள காவல்துறை, 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அனுமதி … Read more

பயிற்சிக்காக சென்று சீனாவில் உயிரிழந்த புதுக்கோட்டை மருத்துவ மாணவர்! சோகத்தில் பெற்றோர்

சீனாவில் மருத்துவ படிப்பு முடித்து பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் கடந்த 20 தினங்களுக்கு முன்பாக பயிற்சிக்காக சீனா சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவரின் சடலத்தையாவது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்தியில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்த சையது … Read more