செவிலியர்கள் பணி நிரந்தரம் – சீமான் வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு பணிகளுக்காகத் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தன்னலமற்று சேவையாற்றிய செவிலியர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது வேலையில்லை என்று கூறி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்புவது கொடுங்கோன்மையாகும். தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் பணி நிரந்தர உறுதிமொழியுடன் கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்தில் ஏறத்தாழ 4000 செவிலியர்கள் பெருந்தொற்றுத் தடுப்புப் … Read more

புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கும் சீனர்கள்.. ஒளி வெள்ளத்தில் மிளிரும் ‘ஐஸ்’ கட்டடங்கள்..!

சீனாவின் ஹார்பின் நகர கேளிக்கை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஐஸ் கட்டடங்கள், புத்தாண்டை முன்னிட்டு ஒளிவெள்ளத்தில் மிளிர்ந்தன. 200 ஏக்கர் பரப்பளவிலான இந்த கேளிக்கை  பூங்காவிற்கு, அருகிலுள்ள ஷோங்குவா ஆற்றிலிருந்து உறைந்த ஐஸ் கட்டிகள் கொண்டுவரப்பட்டு, கண்கவர் கோபுரங்களும், அரங்குகளும் கட்டப்பட்டுள்ளன. நார்னியா திரைப்படங்களில் வரும் கனவு தேசத்தைப்போல் காட்சியளிக்கும் இந்த கேளிக்கை பூங்காவை, அரை கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள சறுக்குப்பாதையில் சறுக்கியபடியும், 390 அடி உயர ராட்சத ராட்டினத்தில் வலம்வந்தபடியும் மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். Source link

பாலியல் குற்றச்சாட்டு புகாருக்கு தனது பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் சந்தீப் சிங்..!

பாலியல் குற்றச்சாட்டு புகாருக்கு உள்ளான ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக செயல்பட்டு பின்னர் அரசியலுக்குள் நுழைந்த சந்தீப்சிங் மீது தடகள பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டார். இந்நிலையில், தனது நற்பெயரை களங்கப்படுத்துவதற்காகவே இப்புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சந்தீப்சிங் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். Source link

பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அராஜகம்: அட்டகாசத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அத்துமீறலில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டம் கொரோனா, உக்ரைன் போர், பொருளாதார நெருக்கடி போன்ற அழுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், உலகமெங்கிலும் உள்ள மக்கள் பிறந்து இருக்கும் 2023 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு பிறந்த புத்தாண்டை பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பகிர்ந்தும் கோலாகலமாக வரவேற்றனர். அந்த வகையில் பிரித்தானியாவில் மத்திய லண்டன் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வாண வேடிக்கைகளுடன் களைகட்டியது. … Read more

நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை சிறுமி பலி

வானூர்: சென்னையை சேர்ந்தவர் பரந்தாமன். ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் உள்பட 5 குடும்பத்தினர் புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்தனர். இதற்காக இவர்கள் தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூத்துறையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். அவர்கள் மாடியில் உள்ள அறைகளில் தங்கியிருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்தபோது நேற்றிரவு 7 மணி அளவில் பரந்தாமனின் மகள் சஹானா (6)யாருக்கும் தெரியாமல் கீழே வந்து, அங்குள்ள நீச்சல் குளத்தின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தார். … Read more

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பிசிசிஐ

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். இந்திய அணிக்கு தேர்வுபெற கட்டாயம் யோ-யோ DEXA பயிற்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  

ஏகாதசி தரிசன டிக்கெட் முன்கூட்டியே விநியோகம்: திருப்பதியில் பக்தர்கள் அலைமோதல்

திருமலை: திருப்பதியில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிப்பதால் சொர்க்கவாசல் வழியாக 10 நாட்களுக்கான இலவச தரிசன டிக்கெட் முன்கூட்டியே விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு  வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாளை அதிகாலை 1.45  மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 2 மணி முதல் 5 மணி வரை மத்திய,  மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் சுவாமி  தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட … Read more

கோவை ஈஷா மையத்தில் இருந்து ஓடி தப்பித்து மாயமான பெண் சடலமாக மீட்பு.. திடுக்கிடும் தகவல்!

கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் காணாமல் போன நிலையில், கோவை ஆலந்துறை பகுதியில் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் அரசு பணியாளர் காலணியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் சென்ற மாதம் 11ம் தேதி கோவை ஆலந்துறை பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயிற்சிக்காக சென்றிருந்தார். ஒரு வாரகால யோகா பயிற்சி முடிந்து கடந்த 18ம் தேதி அவரை அழைப்பதற்காக கணவர் பழனிக்குமார் ஈஷா … Read more

பாலியல் புகார் எதிரொலி: ஹரியானா அமைச்சர் சந்திப் சிங் ராஜினாமா

பாலியல் புகார் எழுந்த நிலையில் ஹரியானா மாநில விளையாட்டு துறை அமைச்சர் சந்திப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இளநிலை தடகள பெண் பயிற்சியாளர் ஒருவர்  சண்டிகர் காவல் துறையில் கொடுத்துள்ள புகாரில் ஜூலை 1, 2022 அன்று, ஹரியானா மாநில விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் ஸ்னாப்சாட் செயலி மூலமாக தன்னை அழைத்து ஆவணங்களை சரி பார்ப்பதற்காக சண்டிகரில் செக்டார் 7ல் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் வரும் படி கூறியதாகவும் அவ்வாறு தான் … Read more