ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு வந்து திரும்பிய சுபஸ்ரீ மாயமான நிலையில் சடலமாக மீட்பு

கோவை: ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு வந்து திரும்பிய சுபஸ்ரீ என்பவர் மாயமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளர். செம்மேடு பகுதியில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து சுபஸ்ரீயின் உடலை போலீசார் மீட்டனர்.   திருப்பூரை சேர்ந்த மாணவி சுப ஸ்ரீ. இவர் கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 18ம் தேதி பயிற்சிக்கு வந்த சுப ஸ்ரீ மாயமானதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்கள் இல்லை: டிஜிபி தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடட்டங்களில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும், விபத்துகளும் இல்லை என்று டிஜிபி கூறியுள்ளார். நேற்று இரவு முதல் இன்று காலை வரை நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. அனைத்து மாநகரம், மாவட்டங்களில் போலீசின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

நாடு முழுவதும் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாட்டம்: ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

டெல்லி: தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் மக்கள் 2023ம் ஆண்டு புத்தாண்டை நேற்று நள்ளிரவு முதல் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். ஓட்டல், பொது இடங்களில் இசைக்கு ஏற்ப நடனமாடியும், ஆட்டம்போட்டும் புத்தாண்டை கொண்டாடினர். புத்தாண்டின் முதல் நாளான இன்று, மக்கள் கோயில், சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வழிபாடு செய்தனர். மேலும், தங்களது அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதற்கிடையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் … Read more

அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பிய கடிதம் – தேர்தல் ஆணையம் விளக்கம்!

தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பிய விவகாரத்தில் தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு (சுஏஆ) இயந்திரம் குறித்து கருத்து தெரிவிக்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு அப்பதவிகளில் … Read more

விண்ணை முட்டும் சரண கோஷம் விழி பிதுங்கும் சபரிமலை: இலங்கை எம்பி ஜீவன் தொண்டமான் தரிசனம்

மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 27 ஆம் தேதியுடன் 41 நாள் மண்டல பூஜைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து டிசம்பர் 30 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் மகர விளக்கு பூஜைக்காலத்தின் … Read more

படம் முழுக்க ரஜினியுடன் நடிக்கணும்: திரிஷா ஆசை

என்னங்க பார்க்க இளமை துள்ளும் அழகியாக இருப்பதால் சும்மா காதல் காட்சிகளில் மட்டுமே நடிப்பேன் என நினைச்சுட்டீங்களா… நமக்கு ஆக் ஷன் நல்லாவே வரும் என நிரூபிக்கும் அளவிற்கு 'ராங்கி' படத்தில் நிருபராக நடித்து சண்டை காட்சிகளில் தெறிக்கவிட்டுள்ள திரிஷா மனம் திறக்கிறார்.. 'ராங்கி' படம், வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றிஇயக்குனர் முருகதாஸ் கதை எழுத, 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குனர் சரவணன் இயக்கிய படம் தான் 'ராங்கி'. இதில் நிருபராக நடித்துள்ளேன். ஹீரோயின் படம் என பார்க்காமல் … Read more

கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கிய வாலிபர்.! தேடும் பணி தீவிரம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மகேஷா என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மகேஷா நண்பர்கள் 7 பேருடன் புத்தாண்டு கொண்டாடுவதற்காக புதுவைக்கு வந்துள்ளார். மேலும் இவர்கள் அனைவரும் கோட்டகுப்பம் அருகே உள்ள சின்ன முதலியார் சாவடியில் அறை எடுத்து தங்கினர். இதையடுத்து அனைவரும் அப்பகுதியில் உள்ள கடலில் குளித்த போது, திடீரென எழும்பிய ராட்சத … Read more

பிக் பாஸ் 5 நாள் 83: என்னை அப்படி கூப்படாதீங்க எச்சரித்த அசிம்; எவிக்ஷனில் வெளியேறப்போவது யார்?

‘மூச்சு விடாமல் ஒரு மணி நேரத்திற்கு பேசினாலும அசிம் பேசுவதில் பாயிண்ட்டே இருக்காது’ என்று நேற்றைய கட்டுரையில் எழுதியிருந்தேன். இந்த எபிசோடில் அசிமாக நடிப்பதற்கு ஷிவினுக்கு வாய்ப்பு கிடைத்த போது, ‘இந்த விஷயத்தை’ மிகத் திறமையாக வெளிக்கொணர்ந்தார். ஒருவகையில் அசிமின் உள்ளீடற்ற வாதத்திறமையை ஷவின் அம்பலப்படுத்தி விட்டார் என்றே சொல்லலாம். அது கடுமையான விமர்சனமாகவே இருந்தாலும் நகைச்சுவையின் மூலம் வைக்கும் போது எதிராளியும் ஒப்புக் கொள்வார் என்பதற்கு ஷிவினின் ‘ஆக்ட்’ ஒரு நல்ல உதாரணம். ‘செம.. செம..’ … Read more

45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு..!

45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு, மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர், திருச்சி மாநகர காவல் ஆணையராக சத்தியபிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பியாக சியாமளா தேவி, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பியாக மோகன்ராஜ், விருதுநகர் மாவட்ட எஸ்.பியாக ஸ்ரீநிவாசபெருமாள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள 45 ஐபிஎஸ் அதிகாரிகளில் 27 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. … Read more