கொடைக்கானலில் கிணற்றில் போராடிய கடமான் மீட்பு: வனத்துறையினர் நடவடிக்கை
கொடைக்கானல்: கொடைக்கானலில் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிய கடமானை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நாயுடுபுரத்தில் உள்ள பெரும்பள்ளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் நேற்று முன்தினம் மாலை தவறி விழுந்த கடமான் ஒன்று உயிருக்கு போராடியது. இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் கொடைக்கானல் வனச்சரக ரேஞ்சர் சிவக்குமார் மற்றும் வனவர் அழகுராஜா ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வனவர் அழகுராஜா தலைமையில் வனத்துறையினர் பெரும்பள்ளம் பகுதிக்கு விரைந்து சென்றனர். … Read more