கொடைக்கானலில் கிணற்றில் போராடிய கடமான் மீட்பு: வனத்துறையினர் நடவடிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானலில் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிய கடமானை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நாயுடுபுரத்தில் உள்ள பெரும்பள்ளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் நேற்று முன்தினம் மாலை தவறி விழுந்த கடமான் ஒன்று உயிருக்கு போராடியது. இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் கொடைக்கானல் வனச்சரக ரேஞ்சர் சிவக்குமார் மற்றும் வனவர் அழகுராஜா ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வனவர் அழகுராஜா தலைமையில் வனத்துறையினர் பெரும்பள்ளம் பகுதிக்கு விரைந்து சென்றனர். … Read more

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு விடு திரும்பிய போது சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கோவை: கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு விடு திரும்பிய பொது சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காளப்பட்டி அருகே எதிரே வந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியதில் கேரளாவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சுமார் என்பவர் சம்பவ இடத்தில் பலியான நிலையில் முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் இன்று அமல்

புதுடெல்லி: சில நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பாதிப்பின்மை சான்றிதழ் கட்டாயம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும், பயணத்தை தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை ‘ஏர் சுவிதா ‘ வலைத்தளத்தில் பதிவேற்றவும் குறிப்பிட்ட நாடுகளின் பயணிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி: எதிர்பார்த்ததை விட எகிறும் உண்டியல் வருவாய் – எத்தனை கோடிகள் தெரியுமா?

திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த ஆண்டு கிடைத்த காணிக்கை வருமானம் 1449 கோடியாக அதிகரித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், முதலில் சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவர். இதைத் தொடர்ந்து பிரசாதமாக லட்டு வாங்குவது என மூன்று விஷயங்களை செய்யத் தவறுவதில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏழுமலையானை வழிபட்ட இரண்டு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கோவில் உண்டியலில் 1449 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இந்நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் காணிக்கை … Read more

கருணாநிதி நினைவிடத்தில் புத்தாண்டு அலங்காரம்.!

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன படி, 2022-ம் ஆண்டு நிறைவடைந்து இன்று  2023-ம் ஆண்டு பிறந்துள்ளது.  இந்த புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து கேக் வெட்டி மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில், இந்த வருடம் பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் … Read more

உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து..!!

இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் அளவிற்க்கு உயர்ந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்நிலையில், 2023-வது ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது … Read more

6 நாடுகளைச் சேர்ந்த விமான பயணிகளுக்கு அலர்ட்!!

ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகாரிக்கும் வாய்ப்பு உள்ள நிலையில் அதை தடுக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம், தனி மனித இடைவெளிகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்த ஒன்றிய அரசு … Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவிகிதமாக உயர்வு – முதலமைச்சர் உத்தரவு..!

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர் – செலவினம் தலைமையில், பள்ளிக் … Read more