புதிய வகை கொரோனா; கடுமையான சவால்களை எதிர்கொள்கிறோம்: சீனா அதிபர்| A new type of corona; Facing serious challenges: China President

பீஜிங்: சீனாவில் கொரோனா புதிய கட்டத்தில் இருக்கிறது; சீனா கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சீனா அதிபர் ஷீ ஜிங்பிங் கூறியுள்ளார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஷீ ஜிங்பிங் சீனா மக்களுக்கு ஆற்றிய உரை: 2023ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்றேன். 2022ம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் 20ஆவது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. உலகளவில் 2ஆவது பெரிய பொருளாதார நாடாக, சீனா தொடர்ந்து நிலை நிறுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ந்து … Read more

சீனாவில் 'புதிய கட்டத்தில் நுழையும்' கோவிட்-19 பற்றி ஜி ஜின்பிங் கமெண்ட்

நியூடெல்லி: கோவிட்-19 இன் புதிய அலை சீனா முழுவதும் பரவி வருவதால், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அணுகுமுறையில் நாடு “புதிய கட்டத்தில்” நுழைவதாக, தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் (டிசம்பர் 31, 2022) கவலை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் சீனா முன்னோடியில்லாத சிரமங்களையும் சவால்களையும் சமாளித்துவிட்டதாகவும், சூழ்நிலை மற்றும் நேரம் தேவைப்படும்போது, சீனாவின் கொள்கைகள் “உகந்த” கொள்கைகளை நாடு ஏற்றுக் கொள்வதாகவும் தொலைக்காட்சி உரையில் ஜி ஜின்பிங் கூறினார். … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு பேட்டி!

கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கிய திமுக, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டினர். அதே சமயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தேர்தல் வாக்குறுதிகளில் என்பது 50, 60, 75 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக பேசி வருகின்றனர்.  ஆனால் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் முக்கியமான வாக்குறுதியாக பார்க்கப்படும் பழைய ஓய்வூதிய திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் … Read more

#BIG NEWS: சிலிண்டர் விலை உயர்வு ..!!

இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோகம் என இரு வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஒவ்வொரு மாதமும், சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. அண்மைக் காலமாக வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தன. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெரும் … Read more

#BIG NEWS : அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழக அரசு..!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, இன்று முதல் 38 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதில் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால், ஆண்டுக்கு 2,359 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. Source link

கனிமொழிக்கு முதல்வர் தகுதி… சிண்டு முடிகிறாரா, சீரியஸா பேசுகிறாரா சீமான்?

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-வது ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 30-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அதன்படி, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், நம்மாழ்வார் உருவப்படத்துக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளிக்கும்போது, தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி குறித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. “முதல்வர் ஸ்டாலின் வாரிசு அரசியலை செய்வதில் விருப்பத்தோடு இருக்கிறீர்கள்தானே. சீமான் அப்படியென்றால், … Read more

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. … Read more

சூரியன் முதல் சந்திரன் வரை பல திட்டங்களை செயல்படுத்தி 2023-ல் சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ

புதுடெல்லி: ஆதித்யா, சந்திரயான்-3, ககன்யான்விண்கலங்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஆர்எல்வி ராக்கெட்டை தரையிறக்குவது உட்பட அறிவியல் சோதனைகள் பலவற்றை இந்தாண்டு மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ 2023-ம் ஆண்டில் அறிவியல் திட்டங்கள் பலவற்றை மேற்கொள்ளவுள்ளது. மீண்டும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்ட ஆர்எல்வி ராக் கெட்டை, கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏரோனாடிக்கல் பரிசோதனை மையத்தில் இன்னும் சில மாதங்களில் இஸ்ரோ தரையிறக்கி பரிசோதிக்கவுள்ளது. சூரியனை பற்றிய ஆய்வை மேற்கொள்ள ஆதித்யா என்ற விண்கலத்தையும் … Read more

"பல மொழிப் படங்களில் நடித்தால் நான் மூழ்கிவிடுவேன் என நினைக்கிறார்கள்"- துல்கர் சல்மான்

குறுகிய காலத்திலேயே திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடித்த இளம் நடிகர் துல்கர் சல்மான். இந்த வருடம் இவர் நடிப்பில் தமிழில் ஹே சினாமிகா, மலையாளத்தில் சல்யூட், ஹிந்தியில் சப்: ரிவஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட், தெலுங்கில் சீதா ராமம் என நான்கு மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதில்  சீதா ராமம்  திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்த்திருந்தது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட துல்கர் சல்மான், பல மொழி திரைப்படங்களில் நடிப்பதால் அவர் விமர்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.   இது குறித்து பேசிய அவர், “நான் … Read more

புத்தாண்டை கோலாகலமாக வரவேற்ற பிரித்தானிய மக்கள்: மகாராணிக்கு சிறப்பு அஞ்சலி

2023ம் புத்தாண்டை பிரித்தானிய பொதுமக்கள் ஆரவாரமாக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பிறந்தது புத்தாண்டு   பல்வேறு மறக்க முடியாத நினைவுகளை சுமந்தவாறு 2022ம் ஆண்டை கடந்து வந்து, உலக மக்கள் அனைவரும் 2023ம் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் ஆரவாரமாக கொண்டாட்டங்களுடன் வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் பிரித்தானிய மக்களும் வானவேடிக்கைகளுடன் தங்களது புத்தாண்டை வரவேற்றுள்ளனர். மத்திய லண்டன் பகுதியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது, அதே நேரத்தில் அருகில் உள்ள குதிரை காவலர்கள் அணிவகுப்பில் ட்ரோன் காட்சிகள் நடைபெற்றது. பிரித்தானியாவில் … Read more