திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!

திருப்பூர்: திருப்பூர் – பெருமாநல்லூர் அடுத்துள்ள பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளைத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 29ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சம்பத் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக  அதனது இரு சக்கர வாகனத்தில் பரமசிவம்பாளையம் வழியாக வந்த போது எதிர்பாராவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த வட இந்தியர் மீது மோதியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அங்கிருந்த வட இந்தியர்கள் ஒன்று திரண்டு சம்பத்தை சிறை பிடித்து அவரிடமிருந்த பணத்தையும் பெற்று கொண்டு இரு சக்கர வாகன சாவியை தராமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பத் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு அவ்வழியாக வந்த இன்னொருவரின் வாகனத்தில் சென்று தனது மகளை அழைத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த தமிழ் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.