கரன்சி நோட்டுகளில் பிரிட்டன் அரசர் புகைப்படம் நீக்கம் – அரசு முடிவு!

ஆஸ்திரேலிய கரன்சி நோட்டுகளில் இருந்து பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லசின் புகைப்படத்தை நீக்குவது என அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.

பிரிட்டன் நாட்டின் காலனி நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா இருந்து வருகிறது. பிரிட்டன் ராணி 2வது எலிசபெத் இருந்த வரை அவரது உருவப் படங்கள் பதித்த கரன்சி நோட்டுகள் ஆஸ்திரேலியாவில் புழக்கத்தில் இருந்தன. அவர் மறைவுக்கு பின்னர், பிரிட்டன் அரசராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றார். இதனை தொடர்ந்து, பழைய கரன்சி நோட்டுகளில் உள்ள ராணி உருவப் படத்திற்கு பதிலாக அரசர் சார்லசின் படங்களை இடம் பெற செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “புதிய ஆஸ்திரேலிய டாலரானது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும். அதனால், இனி வரும் காலங்களில் கரன்சி நோட்டுகளில் பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லசின் புகைப்படம் இடம் பெறாது. இது குறித்து ஆஸ்திரேலிய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. புதிய கரன்சி நோட்டுகள் அச்சடித்து வெளியிட சில காலம் ஆகும். அதுவரை பழைய கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும்,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மியான்மரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்; ராணுவ அரசு அறிவிப்பு.!

இந்த முடிவை, அரசியல் உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளன. ஆனால், ஆஸ்திரேலிய நாணயங்களில் அரசரின் உருவப் படங்கள் தொடர்ந்து இடம் பெறும். ஆஸ்திரேலியாவின் 5 டாலர் கரன்சி நோட்டில் மட்டுமே பிரிட்டன் அரசரின் உருவம் இடம் பெற்றிருந்தது. தற்போது இந்த கரன்சி நோட்டிற்கு பதிலாக புதிய கரன்சி அச்சடிக்கப்பட உள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பினர் ஆதரவு அளித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.