தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கையில் இன்று காலை கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலி, நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது.
மேலும் இன்று புதுச்சேரி, காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரையும், கன்னியாகுமாரி தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.