திருவண்ணாமலை மார்கழி மாத கிரிவலம் நாளை இரவு தொடங்குகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும், ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி நாளை சனிக்கிழமை இரவு 10.41 மணிக்கு தொடங்கி, நாளை மறுநாள் (பிப்ரவரி 5ம்தேதி) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.48 மணிக்கு நிறைவடைகின்றது.
இந்த குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். மேலும், பக்தர்கள் கிரிவலம் செல்வதையொட்டி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.