பட்டப்பகலில் காதல் மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர்

மதுரையில் பட்டப்பகலில் மனைவியை குத்தி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

தெற்கு வாசலைச் சேர்ந்த வர்ஷா என்பவர், தனது கணவர் பழனி நகை, பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், சாலையில் நடந்து சென்ற வர்ஷாவை பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், தப்பிச் சென்ற பழனியை கைது செய்தனர். குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியைக் கொன்றதாக பழனி வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.