ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை மகளிர் அணியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் இம்மாதம் 10 ஆம் திகதி 8ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

10 அணிகள் பங்குபற்றவுள்ள இந்த ஆண்டிற்கான மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகியன குழு ஏ இலும் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன குழு பீ இலும் இடம்பெறுகின்றன.

இந்நிலையில், ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள சமாரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர் அணி குழு வருமாறு:
சமாரி அத்தபத்து (தலைவி), ஓஷதி ரணசிங்க, ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, மல்ஷா செஹானி, நிலக்ஷி டி சில்வா, கவிஷா டில்ஹாரி, அமா காஞ்சனா, அச்சினி குலசூரிய, இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, தாரிகா செவ்வந்தி, அனுஷ்கா சஞ்சீவனி, கௌஷினி நுத்யங்கனா, சத்யா சந்தீபனி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.