முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள், வனவளத் திணைக்கள காணிகள் விடுவிப்பு குறித்த கலந்துரையாடல் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள காணிகளை விடுவித்தல் மற்றும்  ஏனைய காணிப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து விசேட கலந்துரையாடல் இன்று  (17) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில்  முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது. 

 வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள காணிகளை அபிவிருத்தியின் பொருட்டு விடுவித்தல்  மற்றும் மாவட்டத்தின் நிலவும்  ஏனைய காணிப்பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டதுடன் பிரச்சினைகளுக்கான தீர்வுக்குரிய வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டன. 
 
மக்களது காணிகள், விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் போன்றவற்றை குறித்த திணைக்களங்களிடமிருந்து விடுவித்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. 
 
மேலும் குறிப்பாக நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் இருக்கின்ற மக்களது காணிகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
Logini Sakayaraja
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.