இறுதிகட்டத்தில் பணிகள்: ஸ்மார்ட் சிட்டி ஆக மாறியதா சென்னை? – விரிவான பார்வை 

சென்னை: சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜூன் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நகரத்திற்கும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடி நிதி வழங்கப்படும். இதைப்போன்று மாநில அரசு ரூ.500 கோடி நிதி வழங்க வேண்டும். இவை இரண்டும் சேர்த்து … Read more

அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பது ஆளுநரின் கடமை: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சட்டப்பேரவை கூட்டப்படுவதை தாமதப்படுத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும், “அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் கடமைப்பட்டிருக்கிறார்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில், பஞ்சாப் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரை மார்ச் 3-ம் தேதி கூட்ட ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை வழங்கியதாகவும், ஆனால் சட்டப்பேரவை கூட்டப்படுவதை தாமதப்படுத்த ஆளுநர் முயல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த … Read more

பாகிஸ்தான் பரிதாபம் | வேலையை இழக்கும் அபாயத்தில் லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி எதிரொலியாக, அந்நாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருவதால் தற்காலிக பணியாளர்கள் பலரும் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மின்வெட்டு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடி எதிராலியாக அந்நாட்டு உற்பத்தித் துறை … Read more

கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க அனுமதி: மூன்றாவது மாடிக்கு சீல்!

மாணவி மரணத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை மார்ச் முதல் வாரத்திலிருந்து முழுமையாக திறக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. … Read more

கௌதம் மேனன் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொள்ளாத விஜய்..இதுதான் காரணமா ?

வாரிசு படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விக்ரமின் வெற்றி அவரை இந்தியளவில் பிரபலமான நடிகராக மாற்றியது. இதைத்தொடர்ந்து அவர் விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. பொதுவாக இருக்கும் விஜய் படங்களை காட்டிலும் லியோ படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதற்கு மிக முக்கிய காரணம் லோகேஷ் தான். மேலும் மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் … Read more

மாதம் ஒரு முறை நீர் விரதம் இருப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

நீர் விரதம் என்பது உணவு உட்க்கொள்ளாமல் தண்ணீர் மற்றும் குடித்து இருப்பது ஆகும். இதனை 24 மணி முதல் 72 மணி நேரம் வரை செய்யலாம். புதிதாக செய்பவர்கள் 24 மணி நேரம் வரை இருக்கலாம். இதை 21 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை செய்யலாம். நீர் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மை இரத்ததை சீராக வைத்திருக்க உதவுகின்றது. உடல் சுத்தமாகும் எடை குறையும் இரத்த அழுத்தம் குறையும். இதய ஆரோக்கியம் அடையும். … Read more

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா!

டெல்லி: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள்  மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா செய்துள்ளதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஹவாலா பணப்பரிமாற்றம் வழக்கில் கடந்த ஆண்டு (2022) டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஹவாலா பரிமாற்றம் தொடர்பான  வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்  சிறையில் அடைக்கப்பட்டிருந்தும், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அவர் தனது  … Read more

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 902 காவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கி எஸ்.பி. ஆணை..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 902 காவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கி எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள் ஆணையிட்டுள்ளார். பொது மாறுதல் முகாமில் 902 காவலர்களுக்கு அவரவர் விருப்பப்பட்ட காவல் நிலையங்களுக்கு இடமாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

100 நாள் திட்டப்பணியில் முறைகேடு புகார் தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் விசாரிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: 100 நாள் திட்டப்பணியில் முறைகேடு புகார் தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. ராமநாதபுரம் ஆட்சியர் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. போகலூர் ஒன்றியத்தின் திட்ட மேம்பட்டு அலுவலர் ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ராஜினாமா

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ராஜினாமாவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார். ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயினும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணீஷ் சிசோடியாவை தொடர்ந்து அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ராஜினாமாவையும் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றார்.