91 வயதில் மலர்ந்த காதல்… காரணம் சொல்லும் தொழிலதிபர்!

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும்,  டிஎல்எஃப் குழுமத் தலைவருமான குஷால் பால் சிங், 2008 -ம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பணக்காரர் பட்டியலில் உலகின் 8 -வது பணக்காரர் இடத்தை பிடித்தார். பூகம்பத்தைத் தடுக்கும் வகையில் அலுவலக கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டி கொடுத்த வகையில் ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் பிரபலமானவராக விளங்கினார். குஷால் பால் சிங் “வாழ்ந்து காட்டுவோம்!’’ – மணமுடித்த உயரம் குறைவான மாற்றுத்திறன் ஜோடி! வெளிநாடுகளில் தனது … Read more

இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கி வழிப்பறி.. 3 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தது காவல்துறை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். நயினார்பாளையத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் தியாகதுருகத்தில் உள்ள தனது மெக்கானிக்கல் கடைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கமாகும். நேற்று வழக்கம் போல் பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் சின்னசேலம் – நயினார்பாளையம் சாலையில் அசோகன் சென்று கொண்டிருந்தார். அப்போது, காப்புக்காடு அருகே மறைந்திருந்த 3 பேர், அசோகனை மறித்து தாக்கி செல்போனை … Read more

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் முதல் முறையாக  ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் முதன்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் தலைமையில் இன்று (பிப்.28) நடைபெற்றது. கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாமன்ற கூட்டத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, அடுத்த மாமன்றக் கூட்டம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும் என மேயர் பிரியா அறிவித்திருந்தார். இதன்படி, இன்று (பிப்.28) நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் | சந்திரசேகர ராவ் மகள் கவிதா விரைவில் கைது: தெலங்கானா பாஜக நிர்வாகி பேச்சு

ஹைதராபாத்: டெல்லியில் நடைபெற்று வரும் ஆளும் ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கையில் ரூ. 100 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஊழல் பணம், பல்வேறு கட்சி தலைவர்களின் கை மாறியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனால், இவ்வழக்கு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி,டெல்லி அமைச்சரான சத்யேந்திரஜெயினின் தொடர்பு இருப்பதை அறிந்தனர். இதனை தொடர்ந்து, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக தொடர்ந்து நடத்திய விசாரணையில், … Read more

Leo Vijay: ரோலக்ஸுக்கு லியோ என்ன உறவு?: FLAMES போட்டு பார்த்த ரசிகர்கள், நினைச்ச மாதிரியே…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்தய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லோகேஷின் எல்.சி.யூ. கதை தான் லியோவின் கதை என்று கூறப்படுகிறது. அந்த எல்.சி.யூவில் விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் சார் இருக்கிறார். சூர்யாவும், விஜய்யும் நிஜத்தில் நல்ல நண்பர்கள் ஆவர். இந்நிலையில் ரோலக்ஸ் சாருக்கும், லியோவுக்கும் ரீலில் என்ன உறவு … Read more

Oneplus 11 Concept போன் வெளியானது! அதிரடி கூலிங் டெக்னாலஜி உடன் புது போன்!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடந்த உலக மொபைல் மாநாட்டில் Oneplus நிறுவனம் அதன் புதிய கான்செப்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய LED பின்னிஷ் செய்யப்பட்ட கான்செப்ட் போன் ஒன்றை Oneplus நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களிலேயே முதல் முறையாக மிக விலை உயர்ந்த PC desktop பலவற்றில் பயன்படுத்தப்படும் Icy Cryogenic Liquid Flowing பேக் பேனல் வசதி கொண்டுள்ளது. இந்த புதிய டெக்னாலஜி Active CryoFlex technology என்று அழைக்கிறது. … Read more

இந்தியாவால் துன்புறுத்தப்பட்ட நித்யானந்தா? ஐநா-வில் கைலாசா சொன்னது என்ன?

பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்ட பிரபல சாமியார் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவரை எவ்வளவு தேடியும் இந்திய போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கைலாசா என தனி நாடை உருவாக்கி அவரது ஆதரவாளர்களுடன் வசித்து வருகிறார். அந்தத் தீவு எங்குள்ளது என்பது புரியாத புதிர் தான். அவர் தன் நாட்டுக்கென தனி நாணயங்களையும் வெளியிட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு நித்யானந்தா உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி வெளியான போது, அவரே கடிதம் வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாக  தெரிவித்திருந்தார்.  … Read more

புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் என்பது என்ன? சில அடிப்படைத் தகவல்கள்

பிரித்தானியாவின் தற்போதைய தலைப்புச் செய்தியாகியுள்ளது புதிய பிரெக்சிட் ஒப்பந்தம். இந்த புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் என்பது என்ன என்பதைக் குறித்த சில அடிப்படை விடயங்களை மட்டும் பார்க்கலாம். Brexit என்பது என்ன? அதாவது, முன்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது பிரித்தானியா. பின்னர், பொருளாதாரம், புலம்பெயர்தல், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு என பல்வேறு காரணங்களால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என பிரித்தானியா முடிவு செய்தது. அப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத்தான் பிரெக்சிட் என்கிறோம். ’Britain’ … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் புகைப்பட கண்காட்சி: கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில்  அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தொடங்கி வைத்தார். மேலும் திமுகவுடன் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நாளை (மார்ச் 1ந்தேதி) மாநிலம் முழுவதும் திமுகவினரால் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், மார்ச் 1 மாலை 5.00 மணி அளவில் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதில்  அகில … Read more

போடி அருகே கொட்டகுடி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் தேவை

*புழுதிச்சாலையை சீரமைக்க வேண்டும் *விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு போடி : போடி அருகே கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதுடன், 2 கி.மீ தூரமுள்ள புழுதிச்சாலையை தார்ச்சாலையாக மாற்றம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போடி அருகே துரைராஜபுரம் காலனி – தோப்புப்பட்டிக்கு இடையே 2 கி.மீ தூரமுள்ள வேம்புலி வாய்க்கால் சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையின் இரு புறங்களிலும் சுமார் 2000 ஏக்கர் அளவிலான தென்னை, இலவம், வாழை, சோளம், தட்டாம் பயறு, … Read more