கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை -ராகுல் காந்தி

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

விரைவில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் பெலகாவியில் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், குடும்பத் தலை விகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட வாக்குறுதிகளையும் வெளியிட்டார்.

மேலும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 3,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.