எம்.ஜி.ஆருக்கு எதிராக எடப்பாடி; அதிமுக பொ.செ தேர்தலில் குளறுபடி… ஓபிஎஸ் தரப்பு வாதம்!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த

தீவிரம் காட்டிய நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில்

தரப்பினர் வழக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டனர். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அதிமுக உறுப்பினர் ரேவதி தனியாக மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொதுச் செயலாளர் தேர்தல்

கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே மனு தாக்கல் செய்தார். எனவே இவர் போட்டியின்றி தேர்வாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஞாயிறு அன்று ஓபிஎஸ் தரப்பின் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தலுக்கான நடைமுறைகளை தொடரலாம்.

பொதுக்குழு தீர்மானங்கள்

ஆனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என தடை விதித்தது. இதற்கிடையில் மார்ச் 22ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கையும் சேர்த்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டது. இரண்டு வழக்குகளிலும் இன்றைய தினம் தீர்ப்பு வெளியாகி விடும் என்பதால் அதிமுகவில் சட்டப் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியில் இருந்து நீக்கம்

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் வழக்கு விசாரணை சற்றுமுன் தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிடுகையில், ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல் விளக்கம் கேட்காமல் காரணம் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையமானது. நியாமற்றது.

புதிய நிபந்தனைகள்

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக, நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். பெரும்பான்மை இருப்பதால் எந்த முடிவையும் எடுப்போம் என்ற தொனியில் எடப்பாடி தரப்பு செயல்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆருக்கு எதிராக எடப்பாடி

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிரானவை. யாரும் போட்டியிட முடியாத வகையில் பொதுச் செயலாளர் பதவிக்கு நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது.

ஓபிஎஸ் தரப்பு வாதம்

ஆனால் எடப்பாடி பழனிசாமி அத்துமீறி நடந்திருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது. அடுத்தகட்டமாக எடப்பாடி தரப்பின் வாதங்களை நீதிமன்றம் கேட்கவுள்ளது. பின்னர் முக்கியத்துவம் வாயந்த தீர்ப்பை பிறக்க இருக்கிறது. இந்த தீர்ப்பு அதிமுகவில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் என்பதால் ரத்தத்தின் ரத்தங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.