காஞ்சிபுரத்தில் பயங்கரம்.! ரயில் நிலையம் அருகே வாலிபர் அடித்துக்கொலை..!

காஞ்சிபுரத்தில் ரயில் நிலையம் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் நாராயண பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவர் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வணக்கம் போல் வேலைக்குச் சென்ற பிரபாகர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், பிரபாகர் ரத்த காயத்துடன் காஞ்சிபுரம் புதிய ரெயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரபாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, மர்மகும்பல் பிரபாகரை வழிமறித்து இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பிரபாகரை கொலை செய்த மர்ம கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.