“பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளது!!”

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியாகத் திகழும் பாம்பே ஜெயஸ்ரீ முன்னணி இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பல வெற்றித் பாடல்களைப் பாடியுள்ளார்.

அவர் வயலின் வாத்தியக்கலைஞர் லால்குடி ஜெயராமனின் சீடர் ஆவார். அவர் இசைப் பயிற்சியை தனது தந்தை சுப்ரமணியன், தாய் சீதா சுப்ரமணியனிடம் தொடங்கியவர். பின்னாளில் டி.ஆர்.பாலாமணியிடமும், இசை மேதை லால்குடி ஜெயராமனிடமும் இசை பயின்றவர்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றவர். இவர் பரதநாட்டியக் கலைஞரும், வீணைக் கலைஞரும்கூட. தமிழ்உட்பட பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார். சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி அளித்து வருகிறார்.

மின்னலே தமிழ்த் திரைப்படத்தில் இடம் பெற்ற வசீகரா பாடலின் மூலம் பிரபலமானவர். இந்நிலையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ரசிகர்கள் அமைதி காத்து ஆதரவு அளிக்க வேண்டுகிறோம். சமூகவலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று அவரது உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.