Aathmika: தான் நடித்த படத்தை தனது தாத்தாவுடன் சென்று பார்த்த ஆத்மிகா… டிவிட்டரில் நெகிழ்ச்சி!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கண்ணை நம்பாதே. இந்தப் படத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கியிருந்தார். சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகி இருந்தது.

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Nayanthara:மீண்டும் பிகினியில் தரிசனம் கொடுக்கும் நயன்தாரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்திருந்தார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை ஆத்மிகா ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தை திரையரங்கில் தனது தாத்தாவுடன் சென்று பார்த்துள்ளார். இந்த போட்டோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஆத்மிகா.

Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி நான்… அதிர வைத்த ஈஸ்வரி!

மேலும் அந்த போட்டோவுக்கு “மகிழ்ச்சி என்பது தாத்தாவின் முகத்தில் பெருமிதம் பிரகாசிப்பதை பார்ப்பது. 90 வயதை தாண்டியவர் அவரது பேத்தி நடித்த கண்ணை நம்பாதே படத்தை பார்க்க சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறினார். விலைமதிப்பற்ற இந்த தருணங்கள் என்றென்றும் பொக்கிஷமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆத்மிகாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கோடியில் ஒருவன், காட்டேரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கண்ணை நம்பாதே படம் வெளியாகியுள்ளது. அடுத்ததாக நரகாசுரன் படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஆத்மிகா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.