ரியல் எஸ்டேட் அதிபரிடம் 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதாகியுள்ள நபரிடம் போலீஸார் விசாரணை

புதுச்சேரியில், கடன் வாங்கித் தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதாகியுள்ள சிவகங்கையை சேர்ந்த நபர் மேலும் பலரிடம் போலியான காசோலைகளை கொடுத்து பல லட்சம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.

ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கோவிந்தராஜ், தனது நிலத்தை அடமானமாக வைத்து 10 கோடி ரூபாய் கடன் பெற முயன்றதை அறிந்த சென்னையில் வசித்துவரும் காளிதாஸ், போலியான காசோலை தயாரித்து, அதற்கான கமிஷன் தொகையாக 33 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து  கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், கடந்த 17ம் தேதி சிவகங்கையில் வைத்து காளிதாஸை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.