மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் 28ம் தேதி நடைபெறுகிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள்
முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகின்ற 28.03.2023 அன்று
நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாமில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தொழில் பொது மேலாளர், வட்டாட்சியர்கள்
உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் மனுக்களின்
மீது மாவட்ட ஆட்சியர் ஆணையின் பேரில் தீர்வு அளிக்க உள்ளனர்.

மேலும்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, வங்கி கடன், உதவி
உபகரணங்கள், பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பார்வையற்றோருக்கான செல்போன், பேருந்து
பயண சலுகை அட்டை மற்றும் இதர அரசு உதவிகள் தொடர்பான உதவிகள் கோரும்
மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள்
வழங்கப்படவுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள்
28.03.2023 அன்று நடைபெறவுள்ள சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாமில்
பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.