தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அடுத்த மூன்று மணி நேரத்திற்கான மழை பற்றிய முன்னறிவிப்பு, அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பு ஆகியவற்றை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரம்!

தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருச்சி, கோயம்பித்தூர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாள்களுக்கான வானிலை!

மேலும், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,

28.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29.03.2023 முதல் 01.04.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
(சென்டிமீட்டரில்):

காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை) 2, தேக்கடி (தேனி), பாலார் அணைக்கட்டு (ராணிப்பேட்டை) தலா 1

மீனவர்களுக்கான எச்சரிக்கை
: ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.