வரும் மே 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை..!!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மே 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் தூக்கு பைகள், குவளைகள், தட்டுகள், குடிநீர் பாக்கெட்கள், தெர்மாகோல் தட்டுகள், உணவுப் பொருட்களை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொண்ட மிட்டாய்கள், ஐஸ்கிரீம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டப்பாக்கள், தெர்மாகோல் அலங்கார பொருட்கள், பிளாஸ்டிக் முள் கரண்டி,சிறிய பேக்கேஜிங் போர்த்தி தாள்கள், இனிப்பு பெட்டிகள், ழைப்பிதழ் அட்டைகளை சுற்றி பிளாஸ்டிக் தாள்களை பேக்கிங் செய்தல், பிளஸ்க்கு பேனர் என மொத்தம் 14 பொருட்கள் சட்டமன்ற வளாகத்திலும், சட்டமன்ற அலுவலகத்திலும் பயன்படுத்தக் கூடாது.

மே 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த சட்டமன்றம் சுற்றுப்புறச் சூழலுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நான் இன்று அறிவிக்கிறேன். இதற்கு எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.