புதிய நிதி ஆண்டு நாளை தொடங்க உள்ள நிலையில், அத்தியாவசிய மருந்துகளின் விலை நாளை முதல் உயர்த்தப்படுகிறது.
மருந்துகள் விலை உயர்வு
அத்தியாவசிய மருந்துகளின் விலையை நாளை முதல் உயர்த்த மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்டவை விலை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் வரை உயருகிறது.
ஆயுள் காப்பீடு வரி
ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பிரீமியம் கொண்ட ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் (Life insurance policy) இருந்து கிடைக்கும் பலன்களுக்கு நாளை முதல் வரி விதிக்கப்படும். எனினும், ULIP பாலிசிகளுக்கு வரி கிடையாது.
மின்னணு தங்க ரசீது
மின்னணு தங்க ரசீதுகளை (Electronic gold receipt) நிஜத் தங்கமாக மாற்றுவதற்கும், நிஜத் தங்கத்தை மின்னணு தங்க ரசீதாக மாற்றுவதற்கும் நாளை முதல் மூலதன ஆதாய வரி (Capital gains tax) கிடையாது.
திருத்தப்பட்ட வருமான வரித்தாக்கல்
2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் விவரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள, திருத்தப்பட்ட படிவத்தை தாக்கல் செய்வதற்கு வரும் 31ம் தேதியே கடைசி நாளாகும். அதன்பின்ன படிவத்தை தாக்கல் செய்ய முடியாது.
newstm.in