ராமநவமி ஊர்வலத்தில் கல்வீச்சு – வன்முறையில் 22 பேர் படுகாயம்

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா உள்ளிட்ட சில பகுதிகளில் ராமநவமி ஊர்வலத்தின் போது இருதரப்பினருக்கு இடையே கடும் மோதல் வெடித்து வன்முறையாக மாறியது.

இந்து அமைப்புகள் ஹவுராவில் ராம நவமி ஊர்வலம் நடத்தியபோது சிலர் கல்வீசிக் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். இதனால் அங்கு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வன்முறையாளர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தில் 22 பேர் காயம் அடைந்தனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த போலீசார், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.