8 மாவட்டங்களில் ஆயுத படை சட்டம் நீட்டிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் 8 மாவட்டங்களில் சிறப்பு ஆயுதப்படை அதிகாரச்சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.  அமைதி குறைவான பகுதிகளாக கருதப்படும் தின்சுகியா, திப்ருகர், சாரைடியோ, சிவசாகர், ஜோர்ஹத், கோலகட், கார்பி ஆங்லாங் மற்றும் திமா ஹசோ ஆகிய 8 மாவட்டங்களில் மேலும் 6 மாதங்களுக்கு சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.