லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக சிக்கிய பதிவுதுறை உதவி பதிவாளர்..!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பத்திரப்பதிவுதுறை உதவி பதிவாளர் சந்திரமோகன், அவரது உதவியாளர் அருண் ஆகியோரை லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ கைது செய்தனர்.

பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் முறைகேடுகள் அதிகரித்திருப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சென்னையிலிருந்து வந்த சிபிஐயினர் காரைக்கால் அலுவலகத்தை கண்காணித்து, உதவி பதிவாளர் லஞ்சம் வாங்கும் போது வெள்ளிக்கிழமையன்று கையும் களவுமாக கைது செய்தனர்.

அலுவலகத்திலிருந்து ஆவணங்கள், ரொக்கம், ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றிய சிபிஐயினர், ராஜாத்தி நகரில் உள்ள சந்திரமோகன் வீட்டிலும் சோதனை நடத்தினர். 2 நாட்களாக நடைபெற்ற சோதனையில், பல கோடி மதிப்பிலான ஆவணம் மற்றும் ரொக்கம் சிக்கியதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.