‘ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து பாஜக பின்வாங்காது’ – அண்ணாமலை

ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து பாஜக பின்வாங்காது என்றும், ஊழல் யார் செய்தாலும் அதுதொடர்பான விவரத்தை கட்சி வெளியிடுமென்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது உரையின் ஒளிபரப்பை அண்ணாமலை, எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பின்னர் பேட்டியளித்த அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தொலைபேசி உரையாடல் பொய்யானது என புகாரளித்தால், முழு உரையாடலையும் வெளியிட்டு, அந்த உரையாடல் எங்கே?, யாரிடம் பேசியது? என்ற விவரத்தை வெளியிட தயாராக உள்ளதாக கூறினார்.

மேலும், கலைஞர் தொலைக்காட்சியில் தனக்கு பங்கு இல்லை என கனிமொழி வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவும், அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.