PS 2: பொன்னியின் செல்வன் 2 படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா ? அடேங்கப்பா..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இயக்குனர் மணிரத்னத்தின் பல ஆண்டுகால கனவு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்கவேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக போராடி வந்தார் மணிரத்னம்.

எம்.ஜி.ஆர் மற்றும் கமல் வரிசையில் மணிரத்னமும் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க முயன்றார். ஆனால் அம்முயற்சிக்கு பலன் கிடைக்காமல் தள்ளிக்கொண்டே சென்றது. இருந்தாலும் நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருந்த மணிரத்னத்திற்கு தற்போது கை மேல் பலன் கிடைத்துள்ளது.

Ayalaan: இந்திய சினிமாவிலேயே முதல்முறை…பிரம்மிக்கவைக்கும் அயலான் படத்தின் கதை..!

லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மிகப்பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்து இயக்கி வெளியிட்டுள்ளார் மணிரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்த இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வசூலித்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் அந்த எதிர்பார்ப்பை கிட்டத்தட்ட பூர்த்தி செய்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

என்னதான் சில பல கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு வந்தாலும் பொதுவான ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தினால் இந்திய சினிமாவிற்கே மணிரத்னம் பெருமை சேர்த்துள்ளதாக அவரை பாராட்டி வருகின்றனர். மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய நடிகர்களை வைத்துக்கொண்டு மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகங்களாக வெளியிட்டதை கோலிவுட் வட்டாரமே பாராட்டி வருகின்றது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு முன்பதிவே அமோகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து முதல் நாள் வசூலிலும் அடித்து நொறுக்கியது PS2. இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் நூறு கோடி வசூலை எட்டியுள்ளது.

சொல்லப்போனால் முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூல் அதிகரித்துள்ளது. எனவே பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வசூல் சாதனையை இரண்டாம் பாகம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

தற்போது உலகளவில் பொன்னியின் செல்வன் 2 நூறு கோடி வசூலை எட்டியுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் வசூல் அமோகமாக இருந்து வருகின்றது. மேலும் இப்படத்தை ரசிகர்கள் முதல் திரைபிரபலன்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.