மாணவிகளிடம் சிலுமிசத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..!

திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவிகளிடம் முறைதவறி நடந்துக்கொண்டதாக அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். செய்யாறு வட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த முருகன், மாணவிகளின் தலையில் ஜாமண்டரிபாக்சினால் தட்டுவது, பக்கத்தில் சென்று நிற்பது, உரசுவது போன்ற சில்மிஷத்தில் ஈடுபடுவது குறித்து தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். அவர் செய்யாறு போலீசில் அளித்த தகவலின் பேரில் போலீசார், மாணவிகளிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், ஆசிரியரை … Read more

தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் ஓராண்டுக்குள் பாரத்நெட் மூலம் இணைக்கப்படும்: அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் பாரத்நெட் திட்டத்தில் இதுவரை 2,007 கிராமப் பஞ்சாயத்துகள் கண்ணாடி இழை வடம் மூலம் அருகில் உள்ள வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலக தலைமையிடத்துடன் இணைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் சென்னையிலுள்ள வலையமைப்பு இயக்க மையத்தில் தெரியும்படி செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பாரத்நெட் திட்டத்தினை, தமிழ்நாடு கண்ணாடி … Read more

இந்திய – இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சிகள் ஆரம்பம்

இந்திய – இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சியின் 10 ஆவது பதிப்பு ஏப்ரல் 3 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி, துறைமுகம் மற்றும் கடல் என்ற இரண்டு கட்டங்களாக இரண்டு நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது. இந்திய கடற்படையை ஐ.என்.எஸ் கில்தான் மற்றும் ஐ.என்.எஸ் சாவித்ரி என்பன பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.  இதேவேளை இலங்கை கடற்படையை விஜயபாகு மற்றும் சமுத்ரா ஆகிய கப்பல்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அத்துடன் இந்திய கடற்படை சேடக் ஹெலிகாப்டர், டோர்னியர் கடல் ரோந்து விமானம், இலங்கை விமானப்படையின் டோர்னியர் … Read more

வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவோருக்கு தகுதிச்சான்றிதழ் வழங்க மாவட்டந்தோறும் வாரியம் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. குழந்தையில்லா தம்பதியர், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தங்களுக்கு தகுதி உண்டு என மாவட்ட மருத்துவ வாரியத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மலட்டுத்தன்மை மறு உருவாக்க உதவிக்கான ஒழுங்குமுறை சட்டம் மற்றும் வாடகைத் தாய் ஒழுங்கு முறை … Read more

மும்பை வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்

மும்பை: மும்பை வந்த விமானத்தில் குடிபோதையில் விமான பணிப்பெண்ணிடம்  அத்துமீறி நட ந்துகொண்ட ஸ்வீடனை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் மும்பை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் ஸ்வீடனை சேர்ந்த ஹரால்ட் ஜோனஸ் என்ற பயணியும் வந்துள்ளார். அப்போது ஜோனஸ் பயணிகளின் அனைவரின்  முன்னிலையிலும் விமானப்பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.   மும்பை   போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்தேரி … Read more

ரா… ரா… பாடல் ஒலிக்கும் வரை எனக்கு ஓய்வில்லை! | I cant rest until the song Ra… Ra… starts playing!

பிரபல கர்நாடக இசைப் பாடகர் கிருஷ்ண குமார்: பிரகாசமான தோற்றமும், அன்பான சிரிப்புமாக அணுகுவது தான், பிறருக்கு நாம் கொடுக்கிற சிறந்த வரவேற்பு என்று நம்புகிறேன். அதனால், வருத்தமாகவும், சோகமாகவும் இருப்பதே எனக்கு பிடிக்காது. என் குருஜி பாலமுரளி கிருஷ்ணாவிடம், கற்றுக் கொண்ட நல்ல பண்புகளில் இதுவும் ஒன்று. குருஜிக்கும், எனக்கும் மூன்று தலைமுறை பந்தம். அவரிடம் நானும், என் மனைவியும் இசை கத்துக்கிட்டது, உரையாடி மகிழ்ந்தது எல்லாம், எங்களின் இசைப் பயணத்துக்கும், இல்லறத்துக்கும் பேருதவியாக அமைந்தது. … Read more

'பத்து தல' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்து 'பத்து தல' படம் இரண்டு நாட்களுக்கு முன்பு மார்ச் 30ம் தேதி வெளியானது. முதல் நாளில் இப்படம் 12 கோடியே 30 லட்சம் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறித்தது. நேற்று இரண்டாவது நாளிலும் 10 கோடி வரை வசூல் இருந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்களில் ஒருவரான … Read more

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 1 5 சிலைகள் திரும்ப ஒப்படைப்பு | Return of 15 idols smuggled from India

நியூயார்க், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால், இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு, அமெரிக்காவின் அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள 15 பழங்கால சிலைகளை திரும்ப ஒப்படைக்க, அந்நாடு முடிவு செய்துஉள்ளது. புதுடில்லியைச் சேர்ந்த பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்த பழமையான சிலைகளை திருடி வெளிநாட்டு அருங்காட்சியகங்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்தார். இது குறித்து புகார் எழுந்ததை அடுத்து, தமிழக கோவில் சிலையை கடத்திய வழக்கில், சுபாஷ் கபூர் சிறையில் … Read more

Suriya visit Keezhadi: கீழடி குறித்து சூர்யா பெருமிதம்… ப்ளு சட்டை மாறன் விமர்சனம்!

மதுரை: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசலில் நடிக்கவுள்ளார் சூர்யா. இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் மதுரை அருகேயுள்ள கீழடி அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தார். அதன் பின்னர் கீழடி அருங்காட்சியகம் குறித்து சூர்யா ட்வீட் செய்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் அவரை விமர்சித்து ப்ளு சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளார். கீழடியில் சூர்யா சூர்யாவின் 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். … Read more

பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து விழுந்த மாணவி தற்கொலை..!

தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மகேசுவரி (25). இவர் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகேசுவரி அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விடுதியின் மேல்தளத்தில் மகேசுவரி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இரவு 11.30 மணியளவில் திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டது. அலறி துடிப்பது போன்ற சத்தமும் கேட்டதால், அங்கிருந்த … Read more