24 மாநிலங்கள்… 67 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்ற 'தனி ஒருவன்' – அதிர்ச்சி தகவல்

ஐதராபாத், 24 மாநிலங்கள், 8 மெட்ரோ நகரங்களை சேர்ந்த 66 கோடியே 90 லட்சம் பேர் மற்றும் நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்பனை செய்த நபரை தெலுங்கானா மாநிலம் சைபராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில், 66 கோடியே 90 லட்சம் பேர் மற்றும் 104 பிரிவுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் தனிப்பட்ட, ரகசிய தகவல்களை திருடி விற்பனை செய்த விநாய் பகத்வாஜ் என்ற தனி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். … Read more

ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி – நாளை தொடக்கம்

சென்னை, 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு டென்னிஸ் கழக தலைமை செயல் அலுவலர் ஹிதேன் ஜோஷி, நாளை முதல் 9-ந்தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு போட்டி நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும் இந்த தொடரில் நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான், உக்ரைன், அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட … Read more

அழகான முகம், உதட்டில் சிரிப்பு, அப்பாவித்தனம் ஆனால் உலகின் மிகப்பெரிய குற்றவாளி சமந்தா லுத்வைட்

வாஷிங்டன் அழகான முகம், உதட்டில் சிரிப்பு, போலீசையே முட்டாளாக்கும் அப்பாவித்தனம். இங்கிலாந்தில் பிறந்த பெண் சமந்தா லுத்வைட், 2012 முதல் இன்டர்போலால் தேடப்படும் உலகின் மிகவும் தேடப்படும் குற்றவாளி ஆவார். சமந்தா தனது சிரித்த முகத்தின் பின்னால் கொடூரமான எண்ணைங்களை மறைத்துக்கொண்டார். சமந்தா கல்லூரியில் படிக்கும் போது மிகவும் அழகாக இருந்தார். வடக்கு அயர்லாந்தில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்தவர். ஈராக்கில் போர் நடந்து கொண்டிருந்த போது நாடு முழுவதும் போர் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன, சமந்தா … Read more

சுங்க வரி கட்டணம் உயர்வு : டோல்கேட்டை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்

சுங்க வரி கட்டணம் உயர்வு : டோல்கேட்டை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம் Source link

சேலம்: கல்லூரி மாணவிகளை பட்டப் பெயர் வைத்து அழைத்த ரெளடி – பரவிய வீடியோ; போலீஸ் விசாரணை

சேலம் மாநகம், சேரராசன் சாலையில் அமைந்துள்ளது மாவட்ட மைய நூலகம். இங்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட புத்தக வாசிப்பாளர்கள் வந்து செல்கின்றனர். சுமார் 300-கும் மேற்பட்ட மாணவ/ மாணவிகள் அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் படிப்பதற்காக இந்நூலகத்திற்கு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாவட்ட நூலக வளாகத்தில் மாணவிகள் சிலர் நின்றுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு நபர் ’செல்லக்குட்டி’ என்று பட்டப் பெயர் வைத்து அங்கிருந்த மாணவிகளை … Read more

திருவிழா கடைகளுக்கு வாடகை நிர்ணயத்து திருவள்ளூர் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி

சென்னை: பங்குனி உத்திரம் திருவிழாவுக்கு தற்காலிகமாக அமைக்கப்படும் சிறு கடைகளுக்கு வாடகையை நிர்ணயித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் முதல் நிலை கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி தாக்கல் செய்துள்ள மனுவில், பாடியநல்லூர் கிராமத்தில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, கோயில் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான … Read more

ஏழை சிறுமியின் உயிரை காப்பாற்ற ரூ.7 லட்சம் ஜிஎஸ்டி ரத்து – அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சசி தரூர் புகழாரம்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு இளம் தம்பதியரின் மகள் நிகாரிகா அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். ரூ.65 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். சிறுமியின் பெற்றோர் பல்வேறு வகைகளில் போராடி ரூ.65 லட்சத்தை திரட்டி வெளிநாட்டில் இருந்து மருந்துகளை வரவழைத்தனர். அந்த மருந்துகளுக்கு ரூ.7 லட்சம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏழை தாய், தந்தையால் ஜிஎஸ்டி … Read more

வறுமை ஒழிப்புத் திட்டம்: முக ஸ்டாலின் பணி நியமனம்.. விரட்டி அடிக்கும் உதயநிதி.?

வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

Viduthalai: வெற்றிமாறன் மீது கோபப்பட்ட பாரதிராஜா: எல்லாத்துக்கும் காரணம் விஜய் சேதுபதி.!

நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தை பாராட்டி தள்ளியுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

ஆங்கில மொழியை தடை செய்யும் பிரபல ஐரோப்பிய நாடு! மீறினால் கோடிகளில் அபராதம்

ஆங்கில மொழியை தடை செய்யும் மசோதாவை பிரபல ஐரோப்பிய நாடான இத்தாலிய அரசு உருவாக்கியுள்ளது. ஆங்கில மொழியை தடை செய்யும் மசோதா இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் (Giorgia Meloni) கட்சி, நாட்டில் உள்ள பொது மற்றும் தனியார் அமைப்புகள் வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கிலத்தை, அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டத்தை முன்மொழிந்துள்ளது. ரூ. 3.6 கோடி வரை அபராதம் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி (Brothers of Italy) தேசியவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட … Read more