கோயில் நுழைவு போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது வைக்கம் போராட்டம்தான்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம்: கோயில் நுழைவு போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது வைக்கம் போராட்டம்தான் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பினராயி உரையாற்றினார். மகாத்மா காந்தி போராட்டத்தில் பங்கேற்றதால் வைக்கம் போராட்டம் தேசிய கவனம் பெற்றது. சட்டப்பேரவை நடக்கும் நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்து விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளார். வைக்கம் போராட்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்த்தியுள்ளார் என்று கேரள முதல்வர் கூறினார்.

காங்கிரஸ் பிரமுகர் நவ்ஜோத்சிங் சித்து பாட்டியாலா சிறையில் இருந்து விடுதலை

பஞ்சாப்: காங். பிரமுகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒருவரை தாக்கிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தான் கடைசி தேர்தல் காங்., – ம.ஜ.த., ஒரே கோஷம் | This is the last election Congress – MJD, same slogan

சீனிவாசப்பூர் :சீனிவாசப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் குமார், ம.ஜ.த., வேட்பாளர் வெங்கட் ஷிவா ரெட்டி ஆகிய இருவருமே, தங்களுக்கு இது தான் கடைசி தேர்தல் என வாக்காளர்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகின்றனர். கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தொகுதியில் 1983 லிருந்து நடந்த சட்டசபை தேர்தலில், ஜனதா கட்சியிலிருந்து இரு முறையும், காங்கிரசிலிருந்து மூன்று முறையும் ரமேஷ் குமார் வென்றார். காங்கிரசிலிருந்து மூன்று முறையும், ஜனதா தளத்திலிருந்து ஒரு முறையும் வெங்கட் ஷிவா ரெட்டி வென்றார். … Read more

தென்னிந்திய சினிமா அளவிற்கு பாலிவுட் இல்லை : காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். திருமணம் ஆகி ஒரு குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் நடித்து வரும் காஜல் தற்போது ‛இந்தியன் 2' திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது, ‛‛ஹிந்தி தான் எனது தாய்மொழி. ஹிந்தி திரைப்படங்களை தான் பார்த்து வளர்ந்தேன். ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு, ஹிந்தி திரையுலகில் குறைவு … Read more

Viduthalai : இந்த ஐந்து காரணத்திற்காக விடுதலை படத்தை கட்டாயம் பாருங்க!

சென்னை : வெற்றி மாறன் இயக்கி உள்ள விடுதலை திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. இப்படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன. படத்தில் விஜய்சேதுபதி, சூரி,கௌதம் மேனன், ராஜிவ் மேனன், சேத்தன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை திரைப்படம் அடுத்த ஜெய்பீம் என படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், விடுதலை படத்தை இந்த ஐந்து காரணத்திற்காக நீங்கள் கட்டாயம் பார்க்கலாம். வெற்றிமாறன் வித்தியாசமான கதைகளை தேர்வு … Read more

`மேய்க்கிறது மாடு, இதுக்கு எதுக்கு ஆடிட்டர் ரிப்போர்ட்?’ – வைரலான வீடியோ.. தாட்கோ மேலாளரின் விளக்கம்

பட்டியல் சமூக மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்குடன் மாவட்ட வாரியாக செயல்பட்டு வருகிறது தாட்கோ திட்டங்கள். சுயமாக முன்னேற நினைக்கும் பட்டியலின மக்களும், இளைஞர்களும் தாட்கோ மூலம் மானியத்துடன் வங்கி கடன் பெற்று, அடுத்த கட்டத்திற்கு செல்வதுண்டு. இந்த கடனை பெறுவதற்குள் லஞ்ச லாவண்யம், வரன்முறைகள் என அம்மக்கள் படும்பாடும் தனி என்றால், விழுப்புரம் மாவட்ட தாட்கோ மேலாளரோ (பொறுப்பு) கடனுதவி கேட்ட இளைஞரை ஒருமையில் பேசி, திட்டிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை: தமிழக நெடுஞ்சாலைத் துறையின் புதிய அறிவிப்புகள்

சென்னை: இந்தியா – இலங்கை இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்றும், மாநில நெடுஞ்சாலைகளின் 3 இடங்களில் சாலையோர வசதி மையங்கள் அமைக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய பிறகு அமைச்சர் எ.வ.வேலு … Read more

ராம நவமியில் சர்ச்சைப் பேச்சு: தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மீது வழக்கு

புதுடெல்லி: ராம நவமி விழாவில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதியின் எம்எல்ஏ ராஜா சிங் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153-A (இரு பிரிவினருக்கு இடையே மதம், இனம், பிறப்பிடம், வாழ்விடம், மொழி சார்ந்து வெறுப்பைத் தூண்டுதல்), சட்டப்பிரிவு 506 (குற்ற மிரட்டல்) ஆகியனவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய … Read more

பாகிஸ்தான் பணவீக்கம் 35.37% ஆக அதிகரிப்பு – கோதுமை வாங்கும்போது நெரிசலில் சிக்கி ஒரு மாதத்தில் 16 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மார்ச் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் 35.37% ஆக அதிகரித்துள்ளது. இது முன் எப்போதும் இல்லாத உயர்வு என்று பாகிஸ்தான் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உற்பத்தி குறைந்து இறக்குமதியும் குறைந்து வருவதால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மட்டுமல்லாது அனைத்துப் பொருட்களின் விலை மற்றும் சேவைகளின் விலை மாதத்திற்கு மாதம் உயர்ந்து வருகிறது. பாகிஸ்தானின் பணவீக்கம் தொடர்பாக அந்நாட்டின் முதலீட்டு நிறுவனமான ஆரிப் ஹபிப் கார்பரேஷன் … Read more

"சக்கர வியூகம்".. ஜாதி காய்களை நகர்த்தும் பாஜக.. காங்., எடுக்கும் "பிரம்மாஸ்திரம்".. தகிக்கும் கர்நாடகா

பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அனல் அடித்து வருகிறது. உண்மையில் சொல்லப்போனால் இது பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் ஒருவிதத்தில் வாழ்வா சாவா தேர்தல்தான். எனவே, கர்நாடகாவை எந்தவிதத்திலும் விட்டுவிடக்கூடாது என்பதில் இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பாஜக ஜாதி காய்களை வைத்து ஆட தொடங்கியிருக்கும் நிலையில், காங்கிரஸோ பெரிய பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க, பாஜகவும் காங்கிரஸும் தங்கள் கையில் இருக்கும் ஆயுதங்களை கொண்டு வெறித்தனமாக … Read more