தோனி ரசிகர்களால் விரக்தியடைந்த ஜடேஜா..விருது வென்றபின் வெளியிட்ட பதிவு


CSK வீரர் ரவீந்திர ஜடேஜா விருது பெற்ற புகைப்படத்தை பகிர்ந்தபோது, தோனி ரசிகர்களை குறிப்பிட்டது பேசு பொருளாகியுள்ளது.

இறுதிப்போட்டியில் CSK

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் 1 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா 22 ஓட்டங்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அத்துடன் மிகவும் மதிப்புமிக்க வீரர் என்ற விருதை அவர் பெற்றார்.

ஜடேஜா-தோனி/Jadeja-Dhoni @IPL

ஜடேஜாவின் ட்வீட்

இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜடேஜா, ‘Upstoxக்கு தெரிந்துவிட்டது ஆனால்..சில ரசிகர்களுக்கு தெரியவில்லை’ என குறிப்பிட்டார்.

தோனி ரசிகர்களை அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம் கடந்த போட்டிகளில் ஜடேஜா துடுப்பாட்டம் செய்யும் போது, அவர் ஆட்டமிழந்தால் தான் தோனி களமிறங்க முடியும் என ரசிகர்கள் கூக்குரலிட்டனர்.

ரசிகரின் பதிவு

ரசிகர்களின் இந்த செயல் ஜடேஜாவை பாதித்ததால் இவ்வாறு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என பரவலாக பேசப்படுகிறது.

இதற்கிடையில் இந்த பதிவுக்கு ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரவீந்திர ஜடேஜாவை நினைத்து வருந்துகிறேன். தனது நாட்டிற்காகவும், ஐபிஎல் அணியான CSKகாகவும் இவ்வளவு செய்துள்ள மனிதர்.

ஆனால் அந்த அணியில் அவரது மதிப்பை யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். எந்த கிரிக்கெட் வீரரும் இப்படி ட்வீட் செய்து பார்த்ததில்லை! அவர் நிச்சயமாக காயம் அடைந்துள்ளார்’ என கூறியுள்ளார்.   





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.