பள்ளி மாணவி பலாத்காரம்… கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை… ஈரோடு மகளிர் நீதிமன்றம் அதிரடி…!

ஈரோடு மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சிங்கம்பேட்டை சின்னசீரனூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பெருமாள் (45). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 14 வயதுடைய 9ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி, கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமி பாட்டியிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டி இதுகுறித்து பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பெருமாளை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இதுதொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பெருமாளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சம் அரசு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.