அண்ணா கேன்டீனுக்கு இலவச நிலம் வழங்கிய சந்திரபாபு நாயுடு

குப்பம்: ஆந்திராவில் முதல்வராக இருந்தபோது சந்திரபாபு நாயுடு ‘அண்ணா கேன்டீன்’ திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், ஆட்சி மாறியதால், திறக்கப்பட்ட அனைத்து அண்ணா கேன்டீன்களும் மூடப்பட்டன. இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியினர் சொந்த செலவில் சில முக்கிய நகரங்களில் திறந்த அண்ணா கேன்டீன்களை ஜெகன் அரசு மூடியது. இதனிடையே, குப்பம் பஸ் நிலையம் அருகே தெலுங்கு தேசம் கட்சியினர் அண்ணா கேன்டீனை திறந்தனர். இங்கும் பிரச்சினை தலை தூக்கியதால், அண்ணா கேன்டீனுக்காக சந்திரபாபு நாயுடு 20 சென்ட் … Read more

திமுக அமைச்சர் வெளியிட தயாராகும் ஆடியோ: ஆளுநர் கிளப்பிவிட்ட விவகாரம்!

சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக மருத்துவரிடம் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் என்ன பேசினார் என்ற ஆடியோ ஆதாரம் உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு குழந்தை திருமணம் நடைபெற்றது என்றும் இரு விரல் சோதனை நடைபெறவில்லை என்றும் கூறினார். முன்னதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்தது. அப்போது ஆணையத்தின் … Read more

Leo: 'லியோ' படத்தில் இந்த பிரபல நடிகரின் தம்பியா.?: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் லோகேஷ்.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் விஜய். இவரது நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தை அதிரடி ஆக்ஷன் படமாக இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் சோஷியல் மீடியாவை அதிர விட்டு வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படத்தில் பிரபல நடிகரின் தம்பி இணைந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் … Read more

யோகி பாபு பட டீசரை வெளியிட்ட ரஜினி

புகழ்மணி இயக்கத்தில் யோகி பாபு, ராம் சுந்தர், பிரியங்கா நடிப்பில் உருவாகும் படம் ‛காவி ஆவி நடுவுல தேவி'. இப்படத்தின் மூலம் ராம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடிக்கிறார்கள். மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கிறார். இதன் கதை, திரைக்கதையை வி.சி.குகநாதன் எழுதியுள்ளார். இதில் யோகி பாபு 14 வேடங்களில் நடித்திருக்கிறார். அவரைச் சுற்றியே கதை … Read more

Salman Khan: கண்டுகொள்ளாத கோலிவுட் ஹீரோஸ்… சல்மான் கானுடன் இணையும் பிரபல இயக்குநர்!

சென்னை: கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் ஏஆர் முருகதாஸ். அஜித்தின் தீனா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ் தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் விரக்தியில் உள்ளார். சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரில் ஒருவரின் படத்தை இயக்கலாம் என செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் போனதால் மீண்டும் பாலிவுட் செல்ல திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மீண்டும் பாலிவுட் செல்லும் ஏஆர் முருகதாஸ்: எஸ்ஜே சூர்யாவிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்து இயக்குநராக தடம் பதித்தவர் … Read more

கன்னியாகுமரி : விவேகானந்தர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து நேரம் மாற்றம்.!

கன்னியாகுமரி : விவேகானந்தர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து நேரம் மாற்றம்.! சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக கன்னியாகுமரி உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் ஏராளமான பயணிகள் வந்து கடலின் அழகை பார்த்துச் செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கடலின் நடுவில் பாறையில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லம் மற்றும் திருவள்ளுவர் சிலை படகின் மூலம் சென்று பார்த்து ரசிக்கின்றனர்.  அதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் குகன், பொதிகை, விவேகானந்தர் என்று மொத்தம் மூன்று படகுகள் … Read more

தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டில் ஈடுபட்ட 2 திருடர்கள் கைது – 24 பவுன் நகைகள் மீட்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட 2 திருடர்களை பிடித்து, அவர்களிடம் இருந்து 24 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர். இவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. ராமநாதபுரம் புளிக்காரத்தெருவைச் சேர்ந்த மல்லம்மாள் காளி கோயில் பூசாரி மனோகரன் வீட்டில் மே 14-ம் தேதி மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள், வெள்ளிப்பொருட்களை வீட்டை உடைத்து திருடிச்சென்றனர். இதுதொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கேணிக்கரை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில், சார்பு ஆய்வாளர் … Read more

தம்பதிகளுக்கான பரிசில் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் – ம.பி. அரசின் இலவச திருமண திட்டத்தில் சர்ச்சை

புதுடெல்லி: மத்தியபிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2006-ல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக ‘கன்ய விவாஹ் யோஜ்னா’ எனும் திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினார். இதன்படி, அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வருடந்தோறும் ஏழைப் பெண் களுக்கு அரசு செலவில் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ரூ.55,000 தொகையும் அளிக்கப்படும் இத்திட்டத்தில் சமீப ஆண்டுகளாக சர்ச்சைகள் கிளம்பி விட்டன. தற்போது, ஜாபுவா மாவட்டத்தின் தண்ட்லாவில் 296 பெண்களுக்கு இலவச திருமணத்தை அரசு நடத்தியது. அப்போது புதுமணத் … Read more