Ajith: அஜித்தை இயக்கமுடியாமல் போனதற்கு காரணம் இதுதான்..ஓப்பனாக பேசிய பிரபல இயக்குனர்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்

​பிஸியான அஜித்துணிவு படத்திற்கு பிறகு அஜித் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். தற்போது படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் போய்க்கொண்டிருக்க விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதையடுத்து அஜித் கிடைக்கும் நேரங்களில் பைக் சுற்றுலா சென்று வருகின்றார். சமீபத்தில் கூட கேரளாவிற்கு அஜித் பைக் சுற்றுலா சென்று சென்னை திருப்பினார். மேலும் புதிதாக மோட்டார் பைக் பிசுனஸ் ஒன்றையும் அஜித் துவங்கியுள்ளார். இவ்வாறு ஒரு பக்கம் படங்கள் மறுபக்கம் பிசுனஸ் என அஜித் செம பிசியாக இருந்து வருகின்றார்.

​லுக் டெஸ்ட்அஜித் சமீபத்தில் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் விடாமுயற்சி படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக லண்டனுக்கு சென்றிருந்தார். தன் லுக்கை விடாமுயற்சி படத்திற்காக முற்றிலும் மாற்றவுள்ள அஜித் லுக் டெஸ்ட்டிற்காக லண்டனுக்கு சென்றதாக தகவல்கள் வருகின்றன. சமீபகாலமாக தன் படங்களில் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கிலேயே அஜித் வரும் நிலையில் விடாமுயற்சி படத்தில் மாடன் லுக்கில் வலம் வர இருக்கின்றார். ஹாலிவுட் தரத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்திற்காக அஜித் தன் லுக்கை முற்றிலும் மாற்ற இருக்கின்றார். எனவே அதற்கான வேலைகளுக்காக அஜித் மற்றும் மகிழ் திருமேனி லண்டனுக்கு சென்றனர். எனவே இந்த தகவலை கேட்ட அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தில் அஜித்தை புது கெட்டப்பில் பார்க்கப்போகின்றோம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்

​முற்றுப்புள்ளிவிடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்திற்கு சம்மந்தமான இடங்களில் ரெய்டு நடந்துள்ளதால் இதன் காரணமாக விடாமுயற்சி படத்திற்கு சிக்கல் ஏற்படுமா என்ற பேச்சுக்கள் பரவலாக போய்க்கொண்டிருக்கின்றன. மேலும் விடாமுயற்சி படம் கைமாறக்கூடும் எனவும் சில வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் இதற்கெல்லாம் அஜித் மற்றும் மகிழ் திருமேனி இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக அஜித் மற்றும் மகிழ் திருமேனி இருவரும் லண்டனுக்கு சென்ற தகவலை கேட்டுவிட்டு இப்படம் கண்டிப்பாக நடக்கும் என்று ரசிகர்கள் நம்பி வருகின்றனர். எனவே இன்னும் சில தினங்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

​மிஸ் செய்த அஜித்விடாமுயற்சி படத்தை பற்றிய பேச்சுக்கள் ஒருபக்கம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்க இயக்குனர் சுராஜ் சொன்ன ஒரு தகவலும் அதைப்போல பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது சுராஜ் இயக்கத்தில் அர்ஜுனின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் தான் மருதமலை. இப்படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் கூறியுள்ளார் சுராஜ். ஆனால் விஜய்யால் அந்த சமயத்தில் நடிக்கமுடியாமல் போனது. இதையடுத்து மருதமலை கதையை அஜித்திடம் கூறியுள்ளார் சுராஜ். அஜித்திற்கு கதை மிகவும் பிடித்திருந்தாலும் அந்த சமயத்தில் அஜித் கிரீடம் என்ற படத்தில் நடித்து வந்துள்ளார். அப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்து வந்ததால் மருதமலை படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்க அஜித் தயங்கியுள்ளார். தொடர்ச்சியாக இரு படங்களில் போலீசாக நடித்தால் எடுபடுமா என்ற சந்தேகத்தில் அஜித் மருதமலை படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இதனை இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.