வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறைக்கு அப்பால் கடற்பரப்பில் 2023 ஜூன் 06 ஆம் திகதி பகல் வேளையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு பேர் (07), ஒரு டிங்கி (01), சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 2023 ஜூன் மாதம் 06 ஆம் திகதி பகல் வேளையில் வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான P 055 கரையோர ரோந்து படகு மூலம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர். அப்போது, ஒரு டிங்கி படகு (01), சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களுடன் குறித்த பகுதியில் செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஏழு பேர் (07) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 37 வயதுக்குட்பட்ட கல்பிட்டி மற்றும் மன்னார் பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் (07), டிங்கி படகு (01), சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை கிழக்கு கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.