மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் கூட ஊழல் குற்றச்சாட்டை சுமத்த முடியாது – அமித்ஷா

மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை நாடு முழுவதும் எடுத்துரைக்கும் வகையில் மகா ஜன்சம்பர்க் அபியான் என்ற பெயரில் வெகுஜன மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை பா.ஜ.க முன்னெடுத்துள்ளது.

இதற்காக இன்று சத்தீஸ்கரின் துர்க் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித்ஷா, 9 ஆண்டுகளுக்கு முன், இந்திய நிலத்தில் ஊடுருவி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நம் ராணுவ வீரர்களை கொன்று வந்ததாகவும், அப்போதைய காங்கிரஸ் அரசு அதனை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

மோடி பிரதமரான பிறகும், பாகிஸ்தான் அதையே செய்ய முயன்றதாகவும் ஆனால் 10 நாட்களுக்குள் துல்லியத் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.