Keerthy suresh: என்னோட புருஷன் மாதிரி அவர் பேசிகிட்டு இருந்தாரு..ஷாக்கான கீர்த்தி சுரேஷ்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷிற்கு சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து விஜய்யின் பைரவா, சர்க்கார் விக்ரமின் சாமி 2, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார்.

இதையடுத்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். இந்நிலையில் தற்போது உடல் எடையை எல்லாம் குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகின்றார்.

தீயாய் பரவிய வதந்தி

இதையடுத்து தற்போது
உதயநிதி
ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக கலந்து வருகின்றார்.

Naa Ready: இந்த மூன்று பாடல்களின் காப்பி தான் நா ரெடி பாடலா? ஆதாரத்துடன் விமர்சிக்கும் ரசிகர்கள்..!

அந்த வகையில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரின் வீட்டிற்கு பெண் பார்க்க வந்த ஒருவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். அவர் கூறியதாவது, ஒருமுறை ஒருவர் நான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து என் வீட்டிற்கு வந்தார். அவர் என் பாட்டியிடம், நான் ஏன் உதயநிதியின் படத்தில் நடிக்கிறேன் என உரிமையாக கேட்டார். மேலும் என்னை அவரின் மனைவியாக பாவித்து பேசியுள்ளார்.

கடைசியில் அவர் என்னை பெண்கேட்டு வந்துள்ளாராம். இதனை என் அம்மா என்னிடம் கூறினார். அவர் ஏன் நான் உதயநிதியுடன் நடித்தேன் என்று கேட்டதை நான் உதயநிதியிடையே கூறியுள்ளேன் என்றார் கீர்த்தி சுரேஷ். மேலும் சில நாட்களாக கீர்த்தி சுரேஷ் தன் நண்பருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதைவைத்து பல சர்ச்சைகள் கிளம்ப இதற்கும் விளக்கம் அளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவர் கூறியதாவது, அந்த புகைப்படத்தில் இருப்பது என் நண்பர். இந்த செய்தியை நானும் படித்தேன். இதைப்பார்த்து என் நண்பரின் காதலி அவரிடம் கோபித்துக்கொண்டார் என கூறினார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் இந்த புகைப்படத்தை வைத்து பரவிய வதந்திக்கு கீர்த்தி சுரேஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.