ஆசிய டேபிள் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் வெற்றி

யோங்க் சாங்,

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் யோங்க் சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 104-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி 10-12, 11-8, 11-7, 11-7 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சு யு சென்னினை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். தாய்லாந்தின் ஜினிபாவை எதிர்கொள்ள இருந்த இந்திய முன்னணி வீராங்கனை மணிகா பத்ரா கடைசி நேரத்தில் விலகினார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அஹிகா முகர்ஜி 11-2, 11-0, 11-1 என்ற நேர்செட்டில் நேபாளத்தின் சுவால் சிக்காவை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 5-11, 6-11, 9-11 என்ற நேர்செட்டில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஜப்பானின் மிமா இடோவிடம் பணிந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மானவ் தாக்கர்-மானுஷ் ஷா ஜோடி 11-7, 11-7, 11-8 என்ற நேர்செட்டில் உஸ்பெகிஸ்தானின் அப்துல்லா அனோர்போவ்-குத்பிடில்லோ இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் அஹிகா முகர்ஜி-சுதிர்தா முகர்ஜி இணை 11-1, 13-11, 10-12, 11-7 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் ஏஞ்சலினா ரோமானோவ்ஸ்கயா-சர்வினோஸ் மிர்காடிரோவ் ஜோடியை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.