'பசுமை திருமணம்' செய்யும் ரகுல் ப்ரீத் சிங்

அது என்ன 'பசுமை திருமணம்' எனக் கேட்கிறீர்களா ?. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தனது திருமணத்தை நடத்த உள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். திருமண அழைப்பிதழ் கூட பேப்பரில் இல்லாமல் டிஜிட்டல் அழைப்பிதழ் மட்டுமே அளித்துள்ளார்களாம். திருமண நிகழ்வில் பட்டாசுகளை வெடிப்பது உள்ளிட்டவற்றிற்கும் 'நோ' சொல்லிவிட்டார்களாம். 'பசுமை திருமணம்' நடத்துவதற்காக தனி குழு ஒன்றையும் ரகுல் ப்ரீத்தும் அவரது வருங்காலக் கணவர் ஜாக்கியும் பணிக்கு வைத்துள்ளார்கள் என்று தகவல்.

பிப்ரவரி 21ம் தேதி தனது மூன்று வருட காதலர் ஜாக்கி பக்னானி என்பவரை கோவா-வில் நடைபெற உள்ள திருமண வைபவத்தில் மணந்து கொள்ள உள்ளார் ரகுல். திருமணக் கொண்டாட்டங்களை நேற்றே ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று மும்பையில் உள்ள ஜாக்கி வீட்டிற்கு ரகுல் குடும்பத்தினர் சென்றுள்ளனர். ரகுல், ஜாக்கி இருவரும் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலிலும் வழிபாடு நடத்தி உள்ளனர்.

திருமணத்திற்கு முந்தைய மற்ற சடங்குகள் நாளை முதல் கோவாவில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. இத்திருமணத்தில் இரு வீட்டாரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்களாம்.

ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் “புத்தகம், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'இந்தியன் 2' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.