எந்தவிதமான முறையில் தேர்தல் நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்டாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தம் தொடர்பான வேலைத்திட்டத்தில் எவ்விதமான பின்னடைவும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
தற்போது நடைமுறையிலுள்ள சீர்திருத்தத்தினை நாட்டின் சட்டமாக்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்குப் பொறுப்பான நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கலந்துரையாடிய அதிதிகள் விசேடமாக வரித்திட்டத்தை டிஜிடல் மயப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நிறைவேற்றுப் பணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவதானம் செலுத்தியதுடன் இராஜாங்க அமைச்சர் பல்வேறு கொள்கைத் தீர்மானங்களால் நான்கு இலட்சம் வரை குறைந்த வருமானம் வரிக் கோவையின் தொகை ஒரு மில்லியன் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.