“நான் சொன்னதை அவர் கேட்கவில்லை..!” – அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அன்னா ஹசாரே

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தாவை கொண்டு வரவேண்டும் என்று கோரி டெல்லியில் போராட்டம் நடத்தியவர் புனேயை சேர்ந்த அன்னா ஹசாரே. அவருடன் சேர்ந்து ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்கி டெல்லி முதல்வராகிவிட்டார். அன்னா ஹசாரே தனது போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக நேற்று இரவு டெல்லியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து அவருடன் சேர்ந்து போராட்டங்கள் நடத்திய அன்னா ஹசாரே வெளியிட்ட செய்தியில், “அரவிந்த் கெஜ்ரிவால் எனது பேச்சை கேட்காமல் போனது வருத்தமாக இருக்கிறது. அவர் முதல்வரானதும் இரண்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன். எனது பேச்சை கேட்கவில்லை. இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அவர்களுக்காக நான் வருத்தப்படவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா என்னுடன் இருக்கும் போது நாட்டிற்காக எப்போதும் நல்லதையே செய்யவேண்டும் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் அதனை நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. நான் இப்போது அவர்களுக்கு ஆலோசனை சொல்வதில்லை.அரசும் சட்டமும் என்ன செய்கிறதோ செய்யட்டும்” என்றார். மேலும் என்னுடன் சேர்ந்து மதுவுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் இன்று மதுபானம் விற்க கொள்கைகளை உருவாக்குகிறார்கள் என்றார்.

டெல்லி அரசு 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. அது அமல்படுத்தியதில் இருந்து சர்ச்சை மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா இதே ஊழல் வழக்கில்சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.