சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சமாக நடப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக துணை செயலர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் ஒதுக்கீடு பெற்ற சின்னங்களை மீண்டும் ஒதுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தன. தேர்தல் ஆணையம் இந்த முறையீடுகள் மீது பாரபட்சம் காட்டாது, சார்பற்ற […]