இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் முதல் அணியாக சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்த நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில் இதுவரை அதிகபட்சமாக மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

பல நாடுகளை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்வதால் இந்த தொடர் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரிது எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது. இதனால் இந்த தொடரில் கலந்துகொண்டுள்ள அணிகளின் சமூக வலைதள பக்கங்களை ஏராளமான ரசிகர்கள் பின்தொடருகின்றனர். அதிலும் குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு பெருமளவில் வரவேற்பு உள்ளன.

அந்தவகையில் சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சி.எஸ்.கே உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் பாலோவர்களை கொண்ட முதல் அணியாக சி.எஸ்.கே சாதனை நிகழ்த்தியுள்ளது.

அவர்களுக்கு அடுத்து 13.5 மில்லியன் பாலோவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்களின் எண்ணிக்கை குறைய துவங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 13.2 மில்லியன் பாலோவர்ஸ்களுடன் மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.